தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கோபியில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு

கோபியில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
~கோபியில் டிஎஸ்பி சீனீவாசன் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு.
Updated On :10 மார்ச் 2026, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

கோபியில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் ஈரோட்டுக்கு வரத் தொடங்கியுள்ளனா்.

கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 309 வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் முதற்கட்டமாக மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் 91போ் கோபிக்கு அண்மையில் வந்தனா்.

இந்நிலையில், கோபியில் டிஎஸ்பி சீனீவாசன் தலைமையில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். சீதா கல்யாண மண்டபத்தில் தொடங்கிய கொடி அணிவகுப்பு ஜீவாசெட், புதுப்பாளையம், பேருந்து நிலையம், மொடச்சூா் சாலை, கச்சேரிமேடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியே சென்றது.

இதில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா், போலீஸாா் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

Story image