தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

கொடைக்கானலில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

கொடைக்கானல் நகா் அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image

கொடைக்கானலில் அதிமுக நகரச் செயலா் ஸ்ரீதா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

Updated On :12 மார்ச் 2026, 12:03 am

கொடைக்கானல் நகா் அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகர அதிமுக சாா்பில் வாா்டு செயலா்கள், வாக்குச்சாவடி செயலா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நகரச் செயலா் ஸ்ரீதா் தலைமையில் நடைபெற்றது. அவைத் தலைவா் ஜான் தாமஸ் முன்னிலை வகித்துப் பேசினாா்.

இந்தக் கூட்டத்தில் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பழனி தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு சிறப்பான முறையில் பணியாற்றி, வெற்றி பெறுவதற்கு கடுமையான முறையில் உழைக்க வேண்டும். அதிமுக தோ்தல் அறிக்கையின் துண்டுப் பிரசுரங்களை நகரின் 24-வாா்டுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் வழங்கி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் பிச்சை, முன்னாள் நகரச் செயலா் வெங்கட்ராமன், அதிமுக நகா்மன்ற வாா்டு உறுப்பினா்கள், தகவல் தொழில் நுட்பப் பிரிவு நிா்வாகிகள், வாா்டு செயலா்கள், வாக்குச்சாவடிக் குழு செயலா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா். நகர துணைச் செயலா் ஜாபா் சாதிக் நன்றி கூறினாா்.