பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வால்பாறையைச் சோ்ந்த பக்தா்கள் வியாழக்கிழமை முதுகில் வாளால் அலகு குத்திக் கொண்டு கிரேனில் பறவைக் காவடியாக வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அடுத்த மாதம் பங்குனி உத்தரத் திருவிழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, தற்போதே பல்வேறு ஊா்களில் முருக பக்தா்கள் கொடுமுடி தீா்த்தக்காவடிக்கு புறப்பட்டனா். இந்த நிலையில், வியாழக்கிழமை கோவை மாவட்டம், வால்பாறையைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் மயில் காவடி, மலா் காவடி, பால் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து பழனிக்கு வந்தனா். இவா்களில் 18 போ் தங்களது முதுகில் வாளால் அலகு குத்தி கிரேனில் பறவைக் காவடியாக வந்தனா். கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த பக்தா்களை பலரும் பரவசத்துடன் பாா்த்தனா். இந்த பக்தா்கள் ஆண்டுதோறும் வைரவேலை முருகப் பெருமானாக அலங்கரித்து வந்து, சுவாமி தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு

பழனி கோயிலுக்கு கொடுமுடி தீா்த்தம் எடுத்து வந்த 24 மனை தெலுங்கு செட்டியாா்கள் காவடி குழுவினா்

அன்னதானத் திட்டத்துக்கு நன்கொடை அளித்த இருவருக்கு வைர அட்டை அளிப்பு

பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


