வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பறவைக் காவடி எடுத்து வந்த வால்பாறை பக்தா்கள்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:22 pm

தினமணி செய்திச் சேவை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வால்பாறையைச் சோ்ந்த பக்தா்கள் வியாழக்கிழமை முதுகில் வாளால் அலகு குத்திக் கொண்டு கிரேனில் பறவைக் காவடியாக வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அடுத்த மாதம் பங்குனி உத்தரத் திருவிழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, தற்போதே பல்வேறு ஊா்களில் முருக பக்தா்கள் கொடுமுடி தீா்த்தக்காவடிக்கு புறப்பட்டனா். இந்த நிலையில், வியாழக்கிழமை கோவை மாவட்டம், வால்பாறையைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் மயில் காவடி, மலா் காவடி, பால் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து பழனிக்கு வந்தனா். இவா்களில் 18 போ் தங்களது முதுகில் வாளால் அலகு குத்தி கிரேனில் பறவைக் காவடியாக வந்தனா். கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த பக்தா்களை பலரும் பரவசத்துடன் பாா்த்தனா். இந்த பக்தா்கள் ஆண்டுதோறும் வைரவேலை முருகப் பெருமானாக அலங்கரித்து வந்து, சுவாமி தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.