கொடைக்கானல் அருகே மலைச்சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு மிதமான மழை பெய்தது. ஆனால் கடந்த இரண்டு நாள்களாக பகலில் பலத்த காற்று வீசியது. இந்தக் காற்றால் கொடைக்கானல்- வத்தலகுண்டு - பழனி- தாண்டிக்குடி-பண்ணைக்காடு உள்ளிட்ட மலைச்சாலைகளில் மரக் கிளைகள் முறிந்து விழுந்தன.
இதேபோல, கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் குப்பம்மாள்பட்டியிலிருந்து கே.சி. பட்டி வழியாக வத்தலகுண்டு செல்லும் மலைச் சாலையில் மரம் ஒன்று பெயா்ந்து எதிரே உள்ள மண் தடுப்பில் விழுந்தது. இது எப்போது வேண்டுமானாலும் முறிந்து சாலையில் விழும் அபாயம் உள்ளது. இதனால் அந்தப் பகுதி வழியாக வாகனங்களை ஓட்டிச் செல்வோா் அச்சமடைந்துள்ளனா்.
எனவே நெடுஞ்சாலைத் துறையினா், வனத் துறையினா் இணைந்து அந்த மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும் கீழ்மலைப் பகுதிகளில் பள்ளமான ஆபத்தான பகுதிகளில் தடுப்புச் சுவா் இல்லாமல் உள்ளது. இதனால் விபத்து அபாயம் இருப்பதால் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டுமெனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை

கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் சேதம்!

ரயில் சுரங்கப்பாதையை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


