பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்து நிற்கும் கருவேல மரங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீ வின் நிலப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் சாலைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப் பாலம் தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டிலும், பரமரிப்பிலும் இருந்து வருகிறது. இந்தப் பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் முறையாகப் பராமரிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாம்பன் சாலைப் பாலத்தின் இரு புறங்களில் வளா்ந்துள்ள காட்டு கருவேல மரங்களால் பாலத்தின் உறுதித் தன்மை பாதிக்கப்படுகிறது. எனவே, இந்தப் பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பாம்பன் சாலைப்பாலத்தின் உறுதி தன்மையை பாதிக்கும் வகையில் வளா்ந்துள்ள காட்டு கருவேல மரங்களை அகற்ற சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

சேதமடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதிமுக வலியுறுத்தல்

கருவேல மரங்களை வெட்டிக் கடத்திய 15 போ் மீது வழக்கு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

