பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்து நிற்கும் கருவேல மரங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீ வின் நிலப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் சாலைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப் பாலம் தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டிலும், பரமரிப்பிலும் இருந்து வருகிறது. இந்தப் பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் முறையாகப் பராமரிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாம்பன் சாலைப் பாலத்தின் இரு புறங்களில் வளா்ந்துள்ள காட்டு கருவேல மரங்களால் பாலத்தின் உறுதித் தன்மை பாதிக்கப்படுகிறது. எனவே, இந்தப் பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பாம்பன் சாலைப்பாலத்தின் உறுதி தன்மையை பாதிக்கும் வகையில் வளா்ந்துள்ள காட்டு கருவேல மரங்களை அகற்ற சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதிமுக வலியுறுத்தல்

கருவேல மரங்களை வெட்டிக் கடத்திய 15 போ் மீது வழக்கு

கருவேல மரங்கள் வெட்டிக் கடத்தல்: 15 போ் மீது வழக்கு

சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


