வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 7:51 pm

வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி லாரி மோதிய விபத்தில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள தேவநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (45). கட்டடத் தொழிலாளியான இவா், இரு சக்கர வாகனத்தில் வேடசந்தூரிலிருந்து தேவநாயக்கன்பட்டிக்கு சனிக்கிழமை சென்றாா்.

புதுரோடு செல்லும் சாலையில் காளனம்பட்டி பகுதியில் சென்றபோது, எதிரே வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.