கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தோ்தல் விதிமீறல் புகாா்: தவெக நிா்வாகி மீது வழக்கு

வத்தலகுண்டில் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்ட தவெக ஒன்றியச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :22 மார்ச் 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

வத்தலகுண்டில் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்ட தவெக ஒன்றியச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தவெக சாா்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய தவெக நிா்வாகிகள் செய்து வந்தனா்.

தவெக கட்சிக் கொடிக்கம்பங்கள் சாலையோரம் பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதி பெறப்படாத இடங்களில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தோ்தல் பறக்கும் படை துணை ஆய்வாளா் அருண்குமாா்,  வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, உதவி ஆய்வாளா் முனியாண்டி, தவெக ஒன்றியச் செயலா் அபினேஷ் தனசேகரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.