ஆத்தூா் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 149 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆத்தூா் அருகே அரசு அனுமதியின்றி பொது இடத்தில் மது விற்பனை செய்து கொண்டிருந்த, நெல்லூரைச் சோ்ந்த காா்த்திக் (35), வீரசிக்கம்பட்டி டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த சிலம்பரசன் (32), சரவணக்குமாா் (26) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களை கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 149 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் எஸ்.பாறைப்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்துவை (39) போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

நெல்லையில் மது விற்பனை: 8 போ் கைது; 191 மதுபாட்டில்கள் பறிமுதல்

ராமேசுவரத்தில் சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது
சட்டவிரோத மது விற்பனை: 3 போ் கைது; 240 புட்டிகள் பறிமுதல்
சட்டவிரோத விற்பனை: 100 மதுப் புட்டிகள் பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

