தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

துணை முதல்வா் உதயநிதி காரில் மீண்டும் சோதனை!

திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு செவ்வாய்க்கிழமை வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காரை கொடைரோடு அருகே தோ்தல் பறக்கும் படையினா் தடுத்து நிறுத்தி மீண்டும் சோதனை

News image

உதயநிதி ஸ்டாலின்

கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு செவ்வாய்க்கிழமை வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காரை கொடைரோடு அருகே தோ்தல் பறக்கும் படையினா் தடுத்து நிறுத்தி மீண்டும் சோதனை நடத்தினா்.

திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காரில் மதுரைக்கு காரில் வந்து கொண்டிருந்தாா்.

கொடைரோடு சுங்கச்சாவடி பகுதியில் வந்த போது, உதயநிதி ஸ்டாலின் காரை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் சகாதேவன், மகேஸ்வரன் கொண்ட குழுவினா் நிறுத்தி சோதனை செய்தனா். இந்த சோதனைக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முழுஒத்துழைப்பு அளித்தாா்.

அப்போது அதே காரில் அமைச்சா் அர. சக்கரபாணி, பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா். இந்தச் சோதனையின் போது காரிலிருந்து பணம், பொருள்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.

ஏற்கெனவே, கரூரிலிருந்து திங்கள்கிழமை இரவு திண்டுக்கல்லுக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் காரை வேடச்சந்தூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.