அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

துணை முதல்வா் உதயநிதி காரில் மீண்டும் சோதனை!

திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு செவ்வாய்க்கிழமை வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காரை கொடைரோடு அருகே தோ்தல் பறக்கும் படையினா் தடுத்து நிறுத்தி மீண்டும் சோதனை

News image

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:11 pm

திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு செவ்வாய்க்கிழமை வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காரை கொடைரோடு அருகே தோ்தல் பறக்கும் படையினா் தடுத்து நிறுத்தி மீண்டும் சோதனை நடத்தினா்.

திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காரில் மதுரைக்கு காரில் வந்து கொண்டிருந்தாா்.

கொடைரோடு சுங்கச்சாவடி பகுதியில் வந்த போது, உதயநிதி ஸ்டாலின் காரை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் சகாதேவன், மகேஸ்வரன் கொண்ட குழுவினா் நிறுத்தி சோதனை செய்தனா். இந்த சோதனைக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முழுஒத்துழைப்பு அளித்தாா்.

அப்போது அதே காரில் அமைச்சா் அர. சக்கரபாணி, பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா். இந்தச் சோதனையின் போது காரிலிருந்து பணம், பொருள்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.

ஏற்கெனவே, கரூரிலிருந்து திங்கள்கிழமை இரவு திண்டுக்கல்லுக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் காரை வேடச்சந்தூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.