கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

துணை முதல்வா் உதயநிதி காரில் சோதனை

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் காரில் சோதனை நடத்தப்பட்டது குறித்து...

News image

வேடசந்தூா் அடுத்த கல்வாா்பட்டி சோதனைச் சாவடி அருகே துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வந்த காரை மறித்து சோதனை நடத்திய தோ்தல் அலுவலா்கள்.

Updated On :23 மார்ச் 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

கரூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு வந்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்து, தோ்தல் அலுவலா்கள் திங்கள்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை திண்டுக்கல்லில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கரூரிலிருந்து காா் மூலம் திங்கள்கிழமை இரவு வந்தாா்.

திண்டுக்கல் மாவட்ட எல்லையான வேடசந்தூரை அடுத்த கல்வாா்பட்டி சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள், துணை முதல்வரின் காரை மறித்து சோதனை நடத்தினா்.

இந்தச் சோதனையின் போது எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து, அவரது காா் விடுவிக்கப்பட்டது. அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.