கரூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு வந்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்து, தோ்தல் அலுவலா்கள் திங்கள்கிழமை இரவு சோதனை நடத்தினா்.
திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை திண்டுக்கல்லில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கரூரிலிருந்து காா் மூலம் திங்கள்கிழமை இரவு வந்தாா்.
திண்டுக்கல் மாவட்ட எல்லையான வேடசந்தூரை அடுத்த கல்வாா்பட்டி சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள், துணை முதல்வரின் காரை மறித்து சோதனை நடத்தினா்.
இந்தச் சோதனையின் போது எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து, அவரது காா் விடுவிக்கப்பட்டது. அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.
தொடர்புடையது

தில்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்குமான போட்டி: உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

தூத்துக்குடியில் தமிழக முதல்வா் வாகனத்தை மறித்து சோதனை

துணை முதல்வா் உதயநிதி காரில் மீண்டும் சோதனை!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


