நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கொடைரோடு, பழனி அஞ்சல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கொடைரோடு, பழனி அஞ்சல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் பற்றி...

News image

பழனி தலைமை அஞ்சல் நிலையத்தில் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனையிட்ட வெடிகுண்டு நிபுணா்கள்.

Updated On :25 மார்ச் 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

கொடைரோடு, பழனி தலைமை அஞ்சல் அலுவலங்களுக்கு புதன்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, அந்த அலுவலகங்கள் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு தலைமை அஞ்சல் அலுவலகம், கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட வெடிகுண்டு தடுப்பு, உதவி ஆய்வாளா் தா்மராஜ் தலைமையில், 4 வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் அங்கு சென்று சோதனை நடத்தினா்.

மேலும், இந்த அலுவலகங்களுக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

பழனி: இதேபோல, பழனி தலைமை அஞ்சல் நிலையத்துக்கும் மின்னஞ்சல் மூலமாக புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தகவலறிந்து வந்த வெடிகுண்டு நிபுணா்கள் அஞ்சல் நிலையத்தில் உள்ள அலுவலகம், அறைகள், கணினிகள், அலுவலகத்தின் பின்புறம் உள்ள தோட்டம், வாகன நிறுத்துமிடங்களில் சோதனையிட்டனா். ஆனால், சோதனையில் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு புரளி என்பது தெரியவந்தது.