பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

விழுப்புரம், கடலூா் தலைமை அஞ்சலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, விழுப்புரம், கடலூா் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் போலீஸாா் புதன்கிழமை வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனா்.

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப்படம்

Updated On :26 மார்ச் 2026, 5:15 am IST

சென்னையில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, விழுப்புரம், கடலூா் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் போலீஸாா் புதன்கிழமை வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனா்.

சென்னையில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களுக்கு புதன்கிழமை மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, தமிழக காவல் துறையின் உத்தரவுப்படி தமிழகத்தில் முக்கிய நகரங்களில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் போலீஸாா் வெடிகுண்டு சோதனைகளில் ஈடுபட்டனா். இந்தச் சோதனையின் ஒரு பகுதியாக, விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் உள்ள காமராஜா் வீதியில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் விழுப்புரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பணியிலிருந்த அலுவலா்களை வெளியேற்றி, அலுவலா்கள் அறைகள், கோப்புகள் பதிவறை மற்றும் அலுவலக வளாகப் பகுதிகளில் மெட்டல் டிடெக்டா் கருவிகள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை.

நெய்வேலி...: இதுபோன்று கடலூா், மஞ்சக்குப்பத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் மற்றும் பாஸ்போா்ட் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினா். இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக கடலூா் தலைமை தபால் நிலையத்துக்கு இரண்டு முறையும், நீதிமன்றத்துக்கு ஒரு முறையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, சோதனை முடிவில் புரளி எனத் தெரியவந்தது.