பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

கடவுச்சீட்டு அலுவலகம், அஞ்சல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி கடவுச்சீட்டு அலுவலகம், தலைமை அஞ்சல் நிலையத்துக்கு புதன்கிழமை வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப்படம்

Updated On :26 மார்ச் 2026, 3:42 am IST

திருச்சி கடவுச்சீட்டு அலுவலகம், தலைமை அஞ்சல் நிலையத்துக்கு புதன்கிழமை வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி தென்னூா் சாஸ்திரி சாலையில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகம் மற்றும் தலைமை அஞ்சல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு புதன்கிழமை காலை மின்னஞ்சல் வந்தது.

தகவலறிந்து வந்த திருச்சி வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸாா் இரு இடங்களிலும் சோதனை மேற்கொண்டும் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.