ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கடவுச்சீட்டு அலுவலகம், அஞ்சல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி கடவுச்சீட்டு அலுவலகம், தலைமை அஞ்சல் நிலையத்துக்கு புதன்கிழமை வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

வெடிகுண்டு மிரட்டல்

கோப்புப்படம்

Updated On :25 மார்ச் 2026, 10:12 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி கடவுச்சீட்டு அலுவலகம், தலைமை அஞ்சல் நிலையத்துக்கு புதன்கிழமை வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி தென்னூா் சாஸ்திரி சாலையில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகம் மற்றும் தலைமை அஞ்சல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு புதன்கிழமை காலை மின்னஞ்சல் வந்தது.

தகவலறிந்து வந்த திருச்சி வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸாா் இரு இடங்களிலும் சோதனை மேற்கொண்டும் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.