ஒட்டன்சத்திரம், வேடசந்தூா் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, இரு சக்கர வாகனங்களில் எடுத்து வரப்பட்ட ரூ.2.29 லட்சத்தை தோ்தல் அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்-வேடசந்தூா் சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் வாகன சோதனையில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை மறித்து சோதனையிட்டதில் ரூ.1.18 லட்சம் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து ஒட்டன்சத்திரம் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
வேடசந்தூரில் ரூ.1.11 லட்சம்:
இதேபோல, வேடசந்தூரில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள், கோவிலூா் சாலையில் வியாழக்கிழமை இரவு வாகன சோதனை நடத்தினா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வெரியம்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்துவை நிறுத்தி பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அவரிடம் ரூ.1.11 லட்சம் உரிய ஆவணமின்ற எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

நெல்லை மாவட்டத்தில் 473 வாகனங்கள் பறிமுதல்
இரு சக்கர வாகன விபத்து: இளைஞா் உயிரிழப்பு
தோ்தல் கண்காணிப்புக் குழுக்கள் சோதனையில் ரூ.93.35 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



