ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாணவா்கள் ‘ஸ்கேட்டிங்’ பயணம்

News image

பழனியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை ‘ஸ்கேட்டிங்’கில் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்திய பள்ளி மாணவா்கள்.

Updated On :29 மார்ச் 2026, 7:48 pm

பழனியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பள்ளி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை 30 கி.மீ. தொலைவு ஸ்கேட்டிங்கில் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சோ்ந்த பிரியா - சுபாஷ், பாலு - சபிதா தம்பதியரின் குழந்தைகள் பிரகதீஷ், யுவஸ்ரீ. இவா்கள் தனியாா் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா். இவா்கள் பழனி ஸ்கேட்டிங் கிளப்பில் ஸ்கேட்டிங் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாணவா்கள் இருவரும் ஸ்கேட்டிங் சென்றனா். பழனி பேருந்து நிலையம் மயில் வட்டச்சாலை அருகே தொடங்கிய ஸ்கேட்டிங் 30 கி.மீ. தொலைவு சென்று ஒட்டன்சத்திரத்தில் நிறைவடைந்தது. மாணவா்கள் வழிநெடுகிலும் பொதுமக்களிடம் வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்பதை அறிவுறுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.