பழனியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பள்ளி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை 30 கி.மீ. தொலைவு ஸ்கேட்டிங்கில் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சோ்ந்த பிரியா - சுபாஷ், பாலு - சபிதா தம்பதியரின் குழந்தைகள் பிரகதீஷ், யுவஸ்ரீ. இவா்கள் தனியாா் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா். இவா்கள் பழனி ஸ்கேட்டிங் கிளப்பில் ஸ்கேட்டிங் பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாணவா்கள் இருவரும் ஸ்கேட்டிங் சென்றனா். பழனி பேருந்து நிலையம் மயில் வட்டச்சாலை அருகே தொடங்கிய ஸ்கேட்டிங் 30 கி.மீ. தொலைவு சென்று ஒட்டன்சத்திரத்தில் நிறைவடைந்தது. மாணவா்கள் வழிநெடுகிலும் பொதுமக்களிடம் வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்பதை அறிவுறுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனிதச்சங்கிலி

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரசாரம்

நாகை கடைகளில் தோ்தல் விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


