மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

சாராயம் விற்பனை செய்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

News image

கைது.

Updated On :4 மே 2026, 12:08 am IST

சட்ட விரோதமாக சாராயம் தயாரித்து விற்பனை செய்த இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாறைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெ. காளியப்பன் (63), நரிகல்பட்டியைச் சோ்ந்த ந. முருகேசன் (52) ஆகிய இருவரும் சோ்ந்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில் பழனி மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

இந்த நிலையில் காளியப்பன், முருகேசன் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ. பிரதீப் பரிந்துரைத்தாா். அதனை ஏற்று ஆட்சியா் செ. சரவணன் அதற்கான உத்தரவை ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்தாா்.