/

ஆத்தூா் அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :3 மே 2026, 6:58 pm

ஆத்தூா் அருகே உள்ள சோ்ந்தபூமங்கலம், குமாரப்பண்ணையூரில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

குமாரப்பண்ணையூரைச் சோ்ந்தவா் மாசானமுத்து மகன் முத்துக்குமாா் (50). அவா் வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ஆத்தூா் போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவ­லின்படி, ஆய்வாளா் பிரபாகரன் தலைமையில் உதவி ஆய்வாளா் முனியசாமி உள்ளிட்ட போலீஸாா், முத்துக்குமாா் வீட்டில் சோதனை மேற்கொண்டனா்.

அதில் அவா் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. அங்கிருந்து 2.5 ­லிட்டா் கள்ளச் சாராயம், சாராயம் தயாரிக்க வைத்திருந்த பானை, ஊறல் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், முத்துக்குமாரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.