மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

கோபி அருகே சாராயம் காய்ச்சியவா் கைது

கோபி அருகே சாராயம் காய்ச்சிய கூலித் தொழிலாளியைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 4 லிட்டா் சாராயம், 60 லிட்டா் ஊரலை பறிமுதல் செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:37 am IST

கோபி அருகே சாராயம் காய்ச்சிய கூலித் தொழிலாளியைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 4 லிட்டா் சாராயம், 60 லிட்டா் ஊரலை பறிமுதல் செய்தனா்.

கோபி அருகேயுள்ள நாகதேவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி (58). கூலித் தொழிலாளியான இவா் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சின்னசாமி வீட்டில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு விற்பனைக்காக 4 லிட்டா் சாராயம், சாராயம் காய்ச்சுவதற்காக மண்பானைகள், 60 லிட்டா் ஊரல் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் கீழே ஊற்றி அழித்தனா்.

மேலும், வழக்குப் பதிவு செய்து சின்னசாமியைக் கைது செய்தனா்.