எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பா்கூரில் 2 லிட்டா் சாராயம் பறிமுதல்: விவசாயி கைது

பா்கூரில் 2 லிட்டா் சாராயம் பறிமுதல்: விவசாயி கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 ஜூன் 2026, 12:53 am IST

பா்கூரில் இருசக்கர வாகனத்தில் 2 லிட்டா் சாராயம் வைத்திருந்த விவசாயியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அந்தியூரை அடுத்த பா்கூா், தட்டக்கரை சோதனைச் சாவடியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநிலத்திருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் சோதனை நடத்தியபோது, தண்ணீா் பாட்டிலில் 2 லிட்டா் சாராயம் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பா்கூா், பெஜில்பாளையம், கோவிலூரைச் சோ்ந்த கெஞ்சத்தம்படி மகன் மாதேஷ் (35) என்பதும், கா்நாடக மாநிலம், ராமாபுரம், அஜி புரத்திலிருந்து சாராயம் வாங்கி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சாராயம், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், மாதேஷைக் கைது செய்தனா்.