தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

கொடைக்கானல் பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

கொடைக்கானல்-சீனிவாசபுரம் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.

Updated On :6 மே 2026, 3:08 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அந்தப் பகுதிகளில் துா்நாற்றம் வீசி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

இதேபோல, தனியாா் விடுதிகளில் அகற்றப்படும் குப்பைகள், மதுப் புட்டிகள், உகாா்த்தே நகா், இருதயபுரம், பாக்கியபுரம், சீனிவாசபுரம் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் கொட்டப்படுகின்றன.

எனவே, குப்பைத் தொட்டிகளிலும், சாலையோரங்களிலும் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.