குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

சேதமடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானலை அடுத்த அட்டுவம்பட்டியில் சேதமடைந்துள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

கொடைக்கானலை அடுத்த அட்டுவம்பட்டியில் சேதமடைந்த பாலம்.

Updated On :6 மே 2026, 3:09 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த அட்டுவம்பட்டியில் சேதமடைந்துள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

வில்பட்டி ஊராட்சி, அட்டுவம்பட்டியில் தெற்குமேடு கருப்பசுவாமி கோயில் பிரிவு அருகேயுள்ள பாலம் சேதமடைந்துள்ளது. கொடைக்கானலிருந்து-பள்ளங்கி, கோம்பை, அட்டுவம்பட்டி, அரக்கால், கடல்கொடை உள்ளிட்ட குக்கிராமங்களுக்கு இந்தப் பாலம் வழியாகதான் செல்ல முடியும்.

இந்தப் பகுதியில் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி, அன்னை தெரசா மகளிா் பல்கலைக் கழகம், ஊராட்சி தொடக்கப் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், இந்தப் பாலம் வழியாக அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எனவே, சேதமடைந்துள்ள இந்தப் பாலத்தை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.