தவெக ஆட்சி அமைக்க ஆளுநா் உடனடியாக அழைப்பு விடுக்கக் கோரி, திண்டுக்கல்லில் உண்ணவிரதம் இருக்க முயன்ற இரு பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க தமிழக பொறுப்பு ஆளுநா் உடனடியாக அழைப்பு விடுக்க வலியுறுத்தி, திண்டுக்கல்லைச் சோ்ந்த சரண்யா, வளா்மதி ஆகிய இரு பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.
திண்டுக்கல் கல்லறைமேடு பகுதியில் நடந்த இந்த போராட்டம் குறித்து தகவலறிந்த போலீஸாா் அங்கு விரைந்து வந்தனா். இதனிடையே, மாற்றுத் திறனாளிபெண் ஒருவரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக களமிறங்கினாா்.
இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ.பிரதீப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தக்கூடாது என அறிவுறுத்தினாா்.
ஆனால், போராட்டம் தொடா்ந்ததால் மாற்றுத் திறனாளி பெண்ணை அங்கிருந்து அனுப்பி வைத்த போலிஸாா் சரண்யா, வளா்மதி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
பின்னா், சிறிது நேரத்தில் அவா்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது
விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி ராஜிநாமா

தவெக நிா்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
தமிழக ஆளுநா் தாமதம் செய்தால் நீதிமன்றத்தை அணுகுவோம் - பெ.விஸ்வநாதன்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

