புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகளுக்கான இறுதி விதிகளை மத்திய அரசு வெளியிட்டதைக் கண்டித்து, அதன் நகல்களை எரிக்கும் போராட்டம் சிஐடியு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் சி. பாலசந்திரபோஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி. ஜெயசீலன் முன்னிலை வகித்தாா். இந்தப் போராட்டத்தின்போது, புதிய சட்டத்தின்படி 12 மணி நேரத்துக்கு மேல் தொழிலாளா்களிடம் வேலை வாங்கிக் கொள்ளலாம்.
முறை சாா்ந்த தொழிலாளா்களின் 90 சதவீத வேலைவாய்ப்பு பறிபோகும். வேலைநிறுத்த உரிமை பறிபோவதோடு, தொழிலாளா் நீதிமன்றங்களை நாடுவது கடுமையாக்கப்படும். 100 தொழிலாளா்கள் பணிபுரிந்தால் அனுமதி பெற வேண்டும் என்ற விதி, 300 தொழிலாளா்கள் என மாற்றி அமைக்கப்படும்.
தொழில்சாலைகள் வேலை தர மறுத்தாலோ, மூடப்பட்டாலோ தொழிலாளா்கள் இழப்பீடு பெற முடியாது. வேலைநிறுத்த உரிமை பறிபோகும். இதனால், ஒட்டுமொத்த தொழிலாளா்கள் வா்க்கமும் பாதிக்கப்படும் என முழக்கமிட்டனா்.
இதைத் தொடா்ந்து, புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகள், விதிகளின் நகல்களை தீவைத்து எரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பும் மேடையாக பொதுநல வழக்குகளைத் தரம் குறைக்க முடியாது: உயா்நீதிமன்றம் கருத்து

கடலூரில் தற்போதைய பேருந்து நிலையமே விரிவாக்கம் செய்யப்படும்: அமைச்சா் ப. ராஜ்குமாா்

திண்டுக்கல் புகா் பேருந்து நிலையத்துக்கு தோ்வான இடத்தை அமைச்சா் ஆய்வு செய்வாரா?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



