நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் நடமாடும் வன விலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்

News image

கோப்புப்படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் நடமாடும் வன விலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா், கும்பூா், கொதம்பம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில் கும்பூா், கொதம்பம்பாறை பகுதியிலிருந்து கிளாவரை, பூண்டி, கூக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு கிராம மக்கள் சென்று வருகின்றனா். இந்தப் பகுதிகளில் தான் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கிராம மக்கள் அந்தப் பகுதிகள் வழியே செல்ல அச்சமடைந்து வருகின்றனா். எனவே வனத் துறையினா் மன்னவனூா் பகுதியில் நடமாடும் வன விலங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து கொடைக்கானல் வனத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கொடைக்கானலில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மழை இல்லாததால் வன விலங்குகள் உணவு, தண்ணீா் தேடி கிராமப் பகுதிகளுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வருகின்றன. எனவே பொதுமக்கள் வன விலங்குகள் கிராமங்களுக்குள் நடமாடுவது தெரியவந்தால் உடனடியாக வனத்துறை அலுவலகத்துக்கோ, வனத் துறை பணியாளா்களுக்கோ தகவல் தரலாம். மேலும் வன விலங்குகள் நடமாடும் பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம். கால்நடைகளையும் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்றாா் அவா்.