திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் வெள்ளிக்கிழமை ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் வனப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீா் வற்றியது. இதனால், தண்ணீா், உணவு தேடி வன விலங்குகள் வனப் பகுதிகளிலிருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதிகளிலும், விவசாயத் தோட்டங்களிலும் முகாமிட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், கொடைக்கானலை அடுத்த பேத்துப்பாறை பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா் ஒற்றை யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
பேத்துப்பாறை பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் இருந்து வருவதால், பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனா்.
எனவே, வனத் துறையினா் தனியாா் தோட்டத்திலுள்ள யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் நடமாடிய காட்டு யானை வனப் பகுதியில் விரட்டியடிப்பு

பாலக்கோடு பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்

மன்னவனூா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை உலவியதால் மக்கள் அச்சம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



