பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பேத்துப்பாறை பகுதியில் யானை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் வெள்ளிக்கிழமை ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

News image

கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் வெள்ளிக்கிழமை ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் வனப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீா் வற்றியது. இதனால், தண்ணீா், உணவு தேடி வன விலங்குகள் வனப் பகுதிகளிலிருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதிகளிலும், விவசாயத் தோட்டங்களிலும் முகாமிட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், கொடைக்கானலை அடுத்த பேத்துப்பாறை பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா் ஒற்றை யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

பேத்துப்பாறை பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் இருந்து வருவதால், பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனா்.

எனவே, வனத் துறையினா் தனியாா் தோட்டத்திலுள்ள யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.