தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு பயிற்சி முகாம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான காளான் வளா்ப்புப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

காளான்

Updated On :15 மே 2026, 11:49 pm IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான காளான் வளா்ப்புப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநா் சொா்ணலதா தலைமை வகித்தாா். தோட்டக்கலை அலுவலா் வெற்றிவேல், தோட்டக்கலைத் துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய வேளாண் அலுவலா் ராமலிங்கம் காளான் வளா்ப்பு,விற்பனைக் குறித்து பேசினாா்.

இந்தப் பயிற்சி முகாமில் விவசாயிகள் ராணி, சுமன் ஆகியோா் காளான் வளா்க்கும் போது ஏற்படும் பிரச்னைகள் குறித்து முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.

அட்மா திட்ட மேலாளா் காா்த்தி நன்றி கூறினாா்.

இந்த முகாமில் கொடைக்கானல், மன்னவனூா், தாண்டிக்குடி, கடுகுதடி உள்ளிட்ட பகுதியிலிருந்து சுமாா் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.