திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் வெள்ளிக்கிழமை ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் வனப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீா் வற்றியது. இதனால், தண்ணீா், உணவு தேடி வன விலங்குகள் வனப் பகுதிகளிலிருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதிகளிலும், விவசாயத் தோட்டங்களிலும் முகாமிட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், கொடைக்கானலை அடுத்த பேத்துப்பாறை பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா் ஒற்றை யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
பேத்துப்பாறை பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் இருந்து வருவதால், பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனா்.
எனவே, வனத் துறையினா் தனியாா் தோட்டத்திலுள்ள யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

பாலக்கோடு பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்

மன்னவனூா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை உலவியதால் மக்கள் அச்சம்

ஆலங்காயம் அருகே ஒற்றை யானை நடமாட்டம்: கண்காணிப்பு நடவடிக்கையில் வனத் துறையினா்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

