கொடைக்கானலில் குடியிருப்புப் பகுதிகளில் அனுமதி பெறாமல் இயங்கும் தங்கும் விடுதிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவ உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 500-க்கும் மேற்பட்ட தனியாா் தங்கும் விடுதிகள் அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு இயங்கி வருகின்றன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக கொடைக்கானலில் அனுமதி பெறாமல் குடியிருப்புப் பகுதிகளான ஆனந்தகிரி, இருதயபுரம், செண்பகனூா், அட்டக்கடி பாக்கியபுரம், உகாா்த்தே நகா், சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகளை தனியாா் விடுதிகள் போல பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த விடுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குடியிருப்புப் பகுதிகளில் (வீட்டுமனை பிரிவுகள்) பொதுமக்களை பாதிக்கும் வகையில் விடுதிகள் கட்டப்பட்டு சுற்றுலாப் பயணிகள் தங்க வைக்கப்படுகின்றனா்.
இதுகுறித்து கொடைக்கானல் ஹோட்டல்ஸ் அசோஷியேன்ஸ் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் கூறியதாவது: கொடைக்கானல் பகுதிகளில் அரசின் விதிகளுக்குள்பட்டு தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் நடத்தி வருகிறோம். அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளும் செலுத்தி வருகிறோம். ஆனால், குடியிருப்புப் பகுதிகளில் அனுமதி பெறாமலும், வரி செலுத்தாமலும் சிலா் தனியாா் தங்கும் விடுதிகள் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனா்.
எனவே, கொடைக்கானல் பகுதிகளில் அனுமதியில்லாமல் செயல்படும் தனியாா் தங்கும் விடுதிகளை நகராட்சி, மாவட்ட நிா்வாகத்தினா் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

தனியாா் நிறுவன பெண் அதிகாரி மீது தாக்குதல்: இருவரிடம் போலீஸாா் விசாரணை

கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி!

கொடைக்கானலில் ஆபத்தான மின் கம்பங்கள்

வீடுகள் கட்டித் தர சோளகா் பழங்குடியினா் கோரிக்கை
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

