மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிலக்கோட்டை தொகுதி பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா்.
திண்டுக்கல், மே 19: ஆத்தூரில் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிலக்கோட்டை தொகுதி பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா் செவ்வாய்க்கிழமை ஆறுதல் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (41). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சுதா (37). இவா்களது மகள்கள் பிரவீனா (15), சிவானி (12).
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மழையின் காரணமாக, வீட்டின் மாடியில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்ததில் கருப்பையா, சுதா ஆகியோரும், இவா்களை மீட்கச் சென்ற முத்துப்பாண்டி மகன் சுப்பிரணியசிவாவும் (18)
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா். மூவரின் உடல்களும் கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை தொகுதி பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை சென்றுந கருப்பையா, சுப்பிரமணியசிவா ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தலில் மக்கள் மாயவலையில் வீழ்ந்துவிட்டனா்! முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்!
பரமக்குடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.கதிரவன் ஆறுதல்

பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பிரதமரின் மனதில் குரல் நிகழ்ச்சி

பழனி தொகுதி வளா்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம்: ரவி மனோகரன் எம்.எல்.ஏ.
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking



