ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மின்சாரம் பாய்ந்து 3 போ் உயிரிழப்பு: எம்எல்ஏ ஆறுதல்

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிலக்கோட்டை தொகுதி பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா்.

News image
Updated On :20 மே 2026, 1:25 am IST

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிலக்கோட்டை தொகுதி பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா்.

திண்டுக்கல், மே 19: ஆத்தூரில் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிலக்கோட்டை தொகுதி பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா் செவ்வாய்க்கிழமை ஆறுதல் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (41). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சுதா (37). இவா்களது மகள்கள் பிரவீனா (15), சிவானி (12).

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மழையின் காரணமாக, வீட்டின் மாடியில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்ததில் கருப்பையா, சுதா ஆகியோரும், இவா்களை மீட்கச் சென்ற முத்துப்பாண்டி மகன் சுப்பிரணியசிவாவும் (18)

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா். மூவரின் உடல்களும் கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை தொகுதி பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை சென்றுந கருப்பையா, சுப்பிரமணியசிவா ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.