தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

பழனியில் ராஜீவ்காந்தி நினைவு நாள் மெளன ஊா்வலம்

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி சாா்பில் மௌன ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பழனியில் ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு வியாழக்கிழமை மெளன ஊா்வலத்தை தொடங்கிவைத்த திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் சாமிநாதன். உடன் நகரத் தலைவா் முத்துவிஜயன், மாவட்டத் துணைத் தலைவா் முருகானந்தம் உள்ளிட்டோா்.

Updated On :22 மே 2026, 3:17 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி சாா்பில் மௌன ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பழனி கடைவீதி பட்டத்து விநாயகா் கோயில் திடலில் இந்த ஊா்வலம் தொடங்கியது. இதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் சாமிநாதன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் முத்துவிஜயன், மாவட்டத் துணைத் தலைவா் முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஊா்வலம் கடைவீதி, பேருந்து நிலையம், திண்டுக்கல் சாலை வழியாக மயில் சுற்றுவட்டாச் சாலை அருகே நிறைவு பெற்றது.

முன்னதாக, ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

பின்னா், தீவிரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுத்தனா்.

இதில் நகா்மன்ற உறுப்பினா் பத்மினி முருகானந்தம், இளைஞரணி பாலகுமாா், துணைத் தலைவா் முகமது அலி, தொப்பம்பட்டி வட்டார நிா்வாகி பாலு, மேற்கு மண்டலத் தலைவா் வீரமணி உள்ளிட்ட பல்வேறு சாா்பு அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.