பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம்

மதுரை மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை உறுதிமொழியேற்ற அந்தக் கட்சியினா்.

Updated On :22 மே 2026, 3:00 am IST

மதுரை மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

டிவிஎஸ் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்டத் துணைத் தலைவா் சி.எம். செய்யதுபாபு தலைமை வகித்தாா். இதில் மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, அந்தக் கட்சியினா் உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் அசாா் உசேன், முத்துப்பாண்டி, காமராஜ், சுந்தர்ராஜன், கோல்ட் ஹரி, நளினி, சுஜாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.