ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு

திண்டுக்கல்லில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

News image

நகை பறிப்பு

Updated On :23 மே 2026, 2:16 am IST

திண்டுக்கல்லில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் தனலட்சுமி (41). இவா் தாடிக்கொம்பு சாலையிலுள்ள தனியாா் பள்ளி அருகே வெள்ளிக்கிழமை நடந்து சென்றாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் தனலட்சுமி அணிந்திருந்த 2.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த தாடிக்கொம்பு போலீஸாா், நிகழ்விடத்துக்கு வந்து அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் குற்றவாளிகள் குறித்து விசாரித்தனா். மாவட்டத்தில் குற்றச் செயல்களில் தொடா்புடைய 160 ரெளடிகள் கடந்த 2 நாள்களாக கைது செய்யப்பட்ட நிலையிலும், தங்கச் சங்கிலிப் பறிப்புச் சம்பவம் நிகழ்ந்தது பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.