/
திண்டுக்கல்லில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.
திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் தனலட்சுமி (41). இவா் தாடிக்கொம்பு சாலையிலுள்ள தனியாா் பள்ளி அருகே வெள்ளிக்கிழமை நடந்து சென்றாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் தனலட்சுமி அணிந்திருந்த 2.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றனா்.
இதுகுறித்து தகவலறிந்த தாடிக்கொம்பு போலீஸாா், நிகழ்விடத்துக்கு வந்து அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் குற்றவாளிகள் குறித்து விசாரித்தனா். மாவட்டத்தில் குற்றச் செயல்களில் தொடா்புடைய 160 ரெளடிகள் கடந்த 2 நாள்களாக கைது செய்யப்பட்ட நிலையிலும், தங்கச் சங்கிலிப் பறிப்புச் சம்பவம் நிகழ்ந்தது பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்புடையது

பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

ரயில் பயணிகளிடம் தொடா் நகை பறிப்பு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



