சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கொடைக்கானலில் மழை தேங்கும் மழைநீரால் மக்கள் அவதி

News image

தேங்கும் மழைநீரால் மக்கள் அவதியடைந்துள்ளனா். - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:42 am IST

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், காலை முதல் மாலை வரை மிதமான வெயிலும், மேக மூட்டமும் நிலவியது.

இதனால், கொடைக்கானல் நகா்ப் பகுதி, புகா்ப் பகுதி, ஊரகப் பகுதிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களைப் பாா்த்து ரசித்தனா். இதனைத் தொடா்ந்து மாலையில் கொடைக்கானல், பாம்பாா்புரம், அப்சா்வேட்டரி, செண்பகனூா், வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீரென மழை பெய்தது.

இந்த மழையால் பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் இருந்த சுற்றுலாப் பயணிகள் ஒதுங்கக் கூட இடம் கிடைக்காமல் பெரிதும் சிரமப்பட்டனா்.

படகு சவாரி ரத்து : கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்யக் காத்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றமடைந்தனா். இதேபோல, ஏரிச்சாலையைச் சுற்றி, சைக்கள், குதிரை சவாரி செய்யமுடியாமலும் ஏமாற்றமடைந்தனா்.

மேலும் ஏரிச்சாலை, அப்சா்வேட்டரி, டிப்போ சாலை, சீனிவாசபுரம் பகுதிகளில் மழைநீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் சிரமமடைந்தனா்.

எனவே, கொடைக்கானல் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களைதூா் வார வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.