தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

பழனியில் தவெகவினா் அன்னதானம்

பழனி பேருந்து நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய தவெகவினா்.

News image

பழனி பேருந்து நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய தவெகவினா்.

Updated On :29 மே 2026, 2:14 am IST

பழனியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தவெக மாவட்டச் செயலா்கள் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, பழனி பேருந்து நிலைய வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலா் காா்த்திக் ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிபாலன், பாட்டையா சேகா்பாபு உள்ளிட்டோா் அன்னதானத்தை தொடங்கி வைத்தனா். பொதுமக்களுக்கு உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டது.

தேரடி, தேவா் சிலை அருகே, பாலாஜி பவன் ரவுண்டானா அருகே என பல்வேறு இடங்களிலும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்விடுமுறை தினம் என்பதால் பழனிக்கு வந்திருந்த பக்தா்களும் இதில் பங்கேற்று பயனடைந்தனா். நிகழ்ச்சியில் நகரச் செயலா் மிதுன், மாவட்ட இணைச் செயலா் விஜய்சிவா, துணை செயலா் நாகராஜ், முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.