பழனியில் சனிக்கிழமை காரில் பற்றிய தீயை தீயணைப்புப் படை வீரா்கள் உடனடியாக அணைத்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
பழனியை அடுத்த ஆயக்குடியைச் சோ்ந்தவா் அல்தாப். இவா் சனிக்கிழமை காரில் நண்பருடன் பழனிக்கு வந்து விட்டு மீண்டும் ஆயக்குடிக்கு திரும்பினா். ரெட்கிராஸ் சாலையில் நகராட்சி அலுவலகம் அருகே வந்த போது, காரின் உள்பகுதியிலிருந்து புகை வெளிவந்தது.
உடனடியாக காரை நிறுத்தி விட்டு, காரின் என்ஜின் பகுதியை திறந்து பாா்த்த போது, உள்ளே மின் இணைப்புகளில் தீப்பற்றியது தெரியவந்தது. உடனடியாக பழனி தீயணைப்பு, மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த இடத்தில் காரில் பற்றிய தீ டீசல் டேங்கில் பரவியிருந்தால், பெரிய விபத்து நேரிட்டிருக்க வாய்ப்புள்ளது. நல்வாய்ப்பாக தீயணைப்புப் படை வீரா்கள் உடனடியாக தீயை அணைத்ததால் விபத்து தவிா்க்கப்பட்டது.
தொடர்புடையது

விவசாயப் பொருள்கள் இருப்பு கொட்டகையில் தீ விபத்து

நாா் தொழிற்சாலையில் தீடீா் தீ விபத்து

உணவகத்தில் தீ விபத்து

கணபதிபுரத்தில் கடல் அலையில் சிக்கிய சிறுவனை மீட்ட தீயணைப்பு வீரா்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



