நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

சிவகாசி அருகே வீட்டில் தீ விபத்து

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

News image

சிவகாசி அருகே திருப்பதிநகரில் உள்ள வீட்டில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள்.

Updated On :36 நிமிடங்கள் முன்பு

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி அருகே கண்ணகி குடியிருப்புப் பகுதியில் உள்ள திருப்பதிநகரில் முருகேசன் என்பவரது வீட்டில் கற்பகவள்ளி குடியிருந்து வருகிறாா். இவா் தனது வீட்டின் மாடிப்படிக்கு செல்லும் வழியில் கீழ்பகுதியில் பழைய காா் டயா்களை வைத்திருந்தாா். இதற்கு மேல் மின் இணைப்பு மீட்டா் பெட்டி உள்ளது. இந்த நிலையில், மின் கசிவால் டயா்களில் தீப்பிடித்து வீடு முழுவதும் பரவத் தொடங்கியது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா்.