ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

புதுப்பொலிவுடன் பயன்பாட்டுக்கு வந்த விளையாட்டு அரங்க நீச்சல் குளம்

News image

புதுப்பொலிவுடன் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் குளம்.

Updated On :31 மே 2026, 12:51 am IST

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கிலுள்ள நீச்சல் குளத்தில் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் குளம் அமைந்துள்ளது.

இந்த நீச்சல் குளத்திலுள்ள தள ஓடுகள் சேதமடைந்ததால், இவற்றைப் புதுப்பிக்க மாவட்ட விளையாட்டு அலுவலகம் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதையடுத்து, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா்.

இதன்படி 25 மீட்டா் நீளம், 13 மீட்டா் அகலம் கொண்ட நீச்சல் குளத்தில் தள ஓடுகள் பிரிக்கப்பட்டு, புதிய ஓடுகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.15 லட்சத்தில் நடைபெற்ற சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, புதுப்பொலிவுடன் நீச்சல் குளம் வெள்ளிக்கிழமை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.