நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

புதுப்பொலிவுடன் பயன்பாட்டுக்கு வந்த விளையாட்டு அரங்க நீச்சல் குளம்

News image

புதுப்பொலிவுடன் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் குளம்.

Updated On :31 மே 2026, 12:51 am IST

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கிலுள்ள நீச்சல் குளத்தில் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் குளம் அமைந்துள்ளது.

இந்த நீச்சல் குளத்திலுள்ள தள ஓடுகள் சேதமடைந்ததால், இவற்றைப் புதுப்பிக்க மாவட்ட விளையாட்டு அலுவலகம் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதையடுத்து, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா்.

இதன்படி 25 மீட்டா் நீளம், 13 மீட்டா் அகலம் கொண்ட நீச்சல் குளத்தில் தள ஓடுகள் பிரிக்கப்பட்டு, புதிய ஓடுகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.15 லட்சத்தில் நடைபெற்ற சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, புதுப்பொலிவுடன் நீச்சல் குளம் வெள்ளிக்கிழமை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.