அழகர்கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 37.50 லட்சம்

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோயில், சோலைமலை முருகன்கோயில்களின் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து
Updated on
1 min read

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோயில், சோலைமலை முருகன்கோயில்களின் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக மொத்தம்  ரூ. 37.50 லட்சம் செலுத்தியிருந்தனர்.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோயிலில் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரொக்கம் ரூ.27 லட்சத்து 91ஆயிரத்து 320-மும், 63 கிராம் தங்கம் , 162கிராம் வெள்ளியும் இருந்தது.
சோலைமலை முருகன்கோயிலில் உண்டில்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரொக்கம் ரூ. 9 லட்சத்து 59 ஆயிரத்து 367-மும்,  37 கிராம் தங்கம்,  526 கிராம் வெள்ளியும்  இருந்தன. கள்ளழகர் திருக்கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் கோயில் நிர்வாக அதிகாரி கவிதாபிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com