ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சாலையோர உணவகத்துக்குள் கார் புகுந்ததில் பள்ளி மாணவர் உள்பட 4 பேர் காயம்

திருநகரில் புதன்கிழமை சாலையோர உணவகத்திற்குள் கார் புகுந்ததில் பள்ளி மாணவர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 2:01 am

DIN

திருநகரில் புதன்கிழமை சாலையோர உணவகத்திற்குள் கார் புகுந்ததில் பள்ளி மாணவர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
மதுரை அருகேயுள்ள திருநகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்.கார் ஓட்டுநர். இவர் தனது காரில் புதன்கிழமை மாலை மதுரைக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது திருநகர் 1 ஆவது பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், அவ்வழியே சைக்கிளில் சென்ற கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ராகுல் (16) மீது மோதி அருகில் இருந்த உணவகத்திற்குள் புகுந்தது. இதில் ராகுல், உணவகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் நடராஜன், இளையராஜா, செந்தில்குமார் ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து திருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ராகுல் திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.