சாலை விபத்தில் இளைஞர் சாவு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜபிரபு (22). திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டையில்
Updated on
1 min read

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜபிரபு (22). திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தொழிற்சாலையில் இரவுப்பணி முடிந்து புதன்கிழமை அதிகாலை இரு சக்கர வாகனத்தில் ராஜபிரபு அய்யங்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தார்.
நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் நான்குவழிச்சாலையில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் நிலைதடுமாறி சாலைத்தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த ராஜபிரபு சம்பவ இடத்திலேயே இறந்தார். நாகமலைபுதுக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com