எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சாலை விபத்தில் இளைஞர் சாவு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜபிரபு (22). திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டையில்

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:35 am

DIN

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜபிரபு (22). திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தொழிற்சாலையில் இரவுப்பணி முடிந்து புதன்கிழமை அதிகாலை இரு சக்கர வாகனத்தில் ராஜபிரபு அய்யங்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தார்.
நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் நான்குவழிச்சாலையில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் நிலைதடுமாறி சாலைத்தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த ராஜபிரபு சம்பவ இடத்திலேயே இறந்தார். நாகமலைபுதுக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.