சசிகலா புஷ்பா எம்பியின் கணவர் மற்றும் குடும்பத்தினர் முன்ஜாமீன் கோரி மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, ராமசாமி என்பவரை தில்லியில் மார்ச் 26-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். ராமசாமி ஏற்கெனவே திருமணமானவர். இவரது முதல் மனைவி சத்யபிரியா, திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராமசாமிக்கு எதிராக புகார் அளித்தார்.
இந்தப்புகாரின் பேரில் ராமசாமி, அவரது சகோதரிகள் செல்வி மற்றும் பாரதி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராமசாமி உள்ளிட்ட மூவரும் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி தீப்தி அறிவுநிதி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சத்யபிரியா தரப்பில் மனு செய்யப்பட்டது.மேலும் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி விசாரணையை ஏப். 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு: நீதிமன்றக் காவலில் உள்ள மூவரிடம் சிபிஐ விசாரிக்க அனுமதி!

பாலன் வன்முறைப் படமல்ல: இயக்குநர் சிதம்பரம்

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் கண்கலங்கி அழுத நடிகர்கள்!

நீர் அருந்துவதால் இவ்வளவு பலன்களா?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


