கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு வலம்

திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழா புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை  நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:49 am IST

திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழா புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை  நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் இவ்விழா கடந்த மார்ச் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. விழாவினையொட்டி சுமார் 25 அடி உயரத்தில் மின் விளக்குகளால் சந்தனக்கூடு அலங்கரிக்கப்பட்டது. 
அதில், சந்தனம் நிரப்பப்பட்ட செம்புடன் நகரின் முக்கிய வீதிகளில் சந்தனக்கூடு சுற்றி வந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். பின்னர் மலை மீதுள்ள தர்காவுக்கு சென்று வழிபாடு நடத்தி, சந்தனம் பூசிக்கொள்ளப்பட்டது. 
இவ்விழாவில் கோவை, திருச்சி, சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஏராளமனோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.