நகராட்சி ஒத்துழைக்காததால், மேலூர் இளைய தலைமுறை சேவை அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை துப்புரவுப் பணியை நிறுத்தினர்.
மேலூரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து இளைய தலைமுறை சேவை அமைப்பை நிறுவியுள்ளனர்.
இவர்கள், பனை மரக் கொட்டகைகளை நடுவது, துப்புரவுப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றனர். இந்த அமைப்பினர், மேலூரில் பெரியாறு கிளைக் கால்வாய்ப் பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றும் பணியை ஞாயிற்றுக்கிழமை துவங்கினர். பின்னர், மேலூர் நகராட்சி நிர்வாகத்தினர் ஒத்துழைக்கவில்லை எனக் கூறி, சேவைப் பணியை பாதியுடன் நிறுத்தினர்.
இது குறித்து இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் கூறுகையில், நகராட்சிக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்து விட்டுத்தான் பணியைத் தொடங்கினோம். இதற்காக, ஜேசிபி மற்றும் ஒரு டிராக்டரையும் வாடகைக்கு எடுத்து வந்தோம். ஆனால், நகராட்சி அலுவலர்கள் டிராக்டரை கொண்டுவந்து திரும்பிச் சென்றுவிட்டனர். எனவே, பணியை தொடர முடியவில்லை என்றார்.
நகராட்சி தரப்பில் கூறுகையில், காலை 9 மணிக்கு துப்புரவு பணியில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தனர்.
நீண்ட நேரமாக யாரும் வரவில்லை. மேலும், விடுமுறை தினம் என்பதால், காத்திருந்து பின் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குட்டித் தூக்கம் போடுபவர்களுக்காக போட்டி நடத்திய தென் கொரியா!

நமன் திர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 160 ரன்கள் இலக்கு!
பிருத்விராஜின் கலிஃபா வெளியீட்டுத் தேதி!

ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

