சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

நாளை  மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை தெற்குக் கோட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்.19) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:08 am IST

மதுரை தெற்குக் கோட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்.19) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
 இதுகுறித்து மதுரை மின்விநியோக வட்ட தெற்கு மெட்ரோ செயற்பொறியாளர் ஆர்.சுஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை தெற்கு கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (ஏப்.19) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.  இதில் மதுரை மெட்ரோ செயற்பொறியாளர் தலைமை வகிக்கிறார். சுப்பிரமணியபுரம் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம்,  யானைக்கல், டவுன்ஹால் சாலை,  மீனாட்சியம்மன் கோயில், மாகாளிபட்டி, மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம் பிள்ளையார் கோயில், தெப்பக்குளம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதியைச் சேர்ந்த மின்நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.