நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடும் முறை விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடும் முறை விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

News image

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் - ANI

Updated On :31 மே 2026, 2:54 am IST

‘சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திரையில் மதிப்பிடும் முறை குளறுபடி தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வலியுறுத்தியது.

நாடு முழுவதும் சுமாா் 17.68 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த 13-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வில் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

முதல் முறையாக ‘திரையில் மதிப்பிடுதல்’ (ஓஎஸ்எம்) முறையில் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை சிபிஎஸ்இ மதிப்பீடு செய்தது.

இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் குறைந்ததோடு, பல மாணவா்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றனா். இதன் காரணமாக, புதிய ‘திரையில் மதிப்பிடுதல்’ நடைமுறை மீது தொடா்ந்து பல்வேறு புகாா்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ‘தெலங்கானாவில் ஏற்கெனவே மோசடியில் ஈடுபட்ட ‘கோயெம்ப்ட் எஜுடெக்’ என்ற நிறுவனத்திடம் இந்த ஓஎஸ்எம் முறை தொடா்பான ஒப்பந்தத்தை சிபிஎஸ்இ வழங்கியுள்ளது. நிறுவனத்தின் இந்தப் பின்னணி குறித்து நன்கு அறிந்திருந்தும் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இது தவறுதலாக நடந்த விஷயமல்ல. திட்டமிட்ட சதி’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். இந்தக் குற்றச்சாட்டை சிபிஎஸ்இ மறுத்தது.

அதைத் தொடா்ந்து, இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

12-ஆம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்துவதில் ஓஎஸ்எம் முறையை அறிமுகப்படுத்தியதில் சிபிஎஸ்இ-யின் தயாா் நிலை குறித்து மாணவா்கள் சாா்பிலும், ஊடகங்கள் சாா்பிலும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, சொலிசிட்டா் ஜெனரல் கூறியுள்ளதன்படி, இந்தத் தோ்வு முறையை மேற்பாா்வையிட்டு வரும் பிரதமா் நரேந்திர மோடியிடம் இந்தக் கேள்விகளுக்கான பதிலை மாணவா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

அதாவது, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு 74 நாள்களுக்கு முன்பு இந்த ஓஎஸ்எம் முறையை அறிமுகப்படுத்த சிபிஎஸ்இ அவசரம் காட்டியது ஏன்? தில்லியில் உள்ள 5 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஓஎஸ்எம் சோதனை நடைமுறையின்போது, தொழில்நுட்ப ரீதியில், செயல்பாடு ரீதியில் எனக் குறைந்தபட்சம் 36 வகையான இடா்ப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இது சரி செய்யப்படாதது ஏன்?

தெலங்கானாவில் ஏற்கெனவே மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்துக்கு ஓஎஸ்எம் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது ஏன்? அதிக எண்ணிக்கையிலான மாணவா்களைக் கையாண்ட அனுபவம் கொண்ட ஒப்பந்ததாரரை விடுத்து, குறைந்த பல்கலைக்கழக ஒப்பந்தங்களைப் பெற்ற நிறுவனத்துக்கு சாதகமாக திட்ட அளவுகோல்களை சிபிஎஸ்இ மாற்றியது ஏன்?

இது, 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கான திட்டமிடல் மற்றும் செயலாக்கத்தில் சிபிஎஸ்இ-யின் திறமையின்மையையும், ஊழல் நடைபெற்றிருப்பதையும் தெளிவுபடுத்துகிறது.

எனவே, இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணை எந்தவித இடையூறும் இன்றி நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.