ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பேருந்து மோதி விவசாயி சாவு

மதுரையில் இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில், விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:25 am

DIN

மதுரையில் இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில், விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
     மதுரை அருகே உள்ள செக்கானூரணி புளியங்குளத்தைச் சேர்ந்த தங்கம் மகன் விவசாயி பழனிக்குமார் (39). இவர் தனது உறவினரான சின்னச்சாமி என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை மதுரைக்கு வந்துள்ளார். விராட்டிபத்து அருகே வந்துகொண்டிருந்த போது, மதுரையில் இருந்து தேனி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மோதியது. இதில், பழனிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உறவினர் சின்னச்சாமி பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.    இது குறித்து பழனிக்குமார் உறவினர் கிருஷ்ணகுமார் அளித்த புகாரின்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.