காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

லாரி மோதி சுமைப் பணியாளர் சாவு

ஆஸ்டின்பட்டி அருகே லாரி மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற சுமைப் பணியாளர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:27 am

DIN

ஆஸ்டின்பட்டி அருகே லாரி மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற சுமைப் பணியாளர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
      வளையங்குளத்தை அடுத்த எலியார்பத்தியைச் சேர்ந்த சுமைப் பணியாளர் பரமசிவம் (48). இவர், ஞாயிற்றுக்கிழமை காலை எலியார்பத்தியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கரடிபட்டிக்கு வந்துள்ளார். அதே நேரம், விருதுநகரிலிருந்து மதுரை நோக்கி லாரி ஒன்று வந்துள்ளது.
     ஆஸ்டின்பட்டி பிரிவு நான்குவழிச் சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, பரமசிவம் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் பின்புறம் லாரி மோதியுள்ளது. இதில், பரமசிவம் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தார். 
     சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பரமசிவத்தை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
    இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.