தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

பழங்குடியினர் சான்று விவகாரம்: உசிலை.யில் பொதுமக்கள் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே  பழங்குடியினர் சான்றிதழ் வழங்கக்கோரி  அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள்

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

உசிலம்பட்டி அருகே  பழங்குடியினர் சான்றிதழ் வழங்கக்கோரி  அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதன்கிழமை அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள வடுகபட்டியில் சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் தங்களுக்கு பழங்குடியினர் (டி .என்.டி ) சான்றிதழ் வழங்கக்கோரி  திங்கள்கிழமையிலிருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். புதன்கிழமை உரிய அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தக்கூடாது என  உத்தரவிட்ட உசிலம்பட்டி போலீஸாரைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்த சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் ஆதிசேடன், தவமணிதேவி, தமிழ்செல்வி, அன்பரசன், தவம், ஆகிய 5 பேரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 
   இதைக் கண்டித்து வடுகபட்டி கிராம மக்கள் மற்றும் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மதுரை- தேனி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தகவலறிந்த போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து  உரிய அனுமதி பெறாமல் எந்தவொரு போராட்டங்களும் நடத்தக்கூடாது என எச்சரித்து விசாரணைக்கு அழைத்துச் சென்ற 5 பேரையும் போலீஸார் விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.